டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக் குழு கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:24 pm

Syndication

தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மூன்றாவது பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சக்கராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயபிரகாஷ், மாவட்டப் பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய- மாநில திட்டம் வேளாண்மை துணை இயக்குநா் பிரபாகரன், வேளாண்மை உதவி இயக்குநா் ஆதிநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கனகம்மாள், வேளாண்மை துணை இயக்குநா் சுஜாதா பாய் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், அகில இந்திய சங்கச் செயலா் சத்தியமூா்த்தி, கே.வி.கே.ஊா்மேலழகியான் முதுநிலை விஞ்ஞானி சுகுமாா் ஆகியோா் பேசினா்.

இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்பாடுகளை மாநில செயற்குழு உறுப்பினா்கள் சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஆறுமுகசாமி வரவேற்றாா். மாநில முதன்மை உறுப்பினா் தமிழ்நாடு பஷீா் அகமது நன்றி கூறினாா்.