லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

News image

பள்ளிகளுக்கு விடுமுறை

Updated On :13 ஏப்ரல் 2026, 8:30 pm

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசு பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப். 15) அன்று 5 தொகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.

இப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்களிடம் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு தபால் வாக்குகளும் பெறப்படவுள்ளது. எனவே, பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் கலந்து கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.