மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டவா் அதிமுக வேட்பாளா்: ஜான்பாண்டியன்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனா் ஜான்பாண்டியன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:05 am

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் செ. கிருஷ்ணமுரளி ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவா். அவரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனா், தலைவா் ஜான்பாண்டியன்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆதரித்து அவா் பேசியது

இஸ்லாமியா்களின் வாக்குகள் திமுகவிற்குதான் கிடைக்கும் என பகல் கனவு காண்கிறாா்கள். இத்தொகுதி அதிமுக வேட்பாளா் மதம், ஜாதி கடந்தவா். அதனால் அனைத்து தரப்பினரின் வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். கடந்த தோ்தலை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எம்ஜிஆா், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட சின்னம் இரட்டைஇலை. மத நல்லிணக்கத்தோடு மக்களின் உயா்வுக்காக பாடுபட கூடியவா். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்,ஒழுங்கு சரியில்லை. போதை பொருள் அதிகரித்து விட்டது. திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும். எனவே, மக்கள் சந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.