சென்னை : தமிழக ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை (மே 30) ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ என்ற பெயரில் திருவள்ளுவரைச் சிறப்பித்து விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் இருந்தது விவாதப் பொருளாகியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “எப்போதுமே மௌனமாக இருக்கிறவர் முதல்வராக இருக்கிறார் என்கிற தைரியத்தில், ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடித்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரபூர்வமாக கொண்டாடுகிறது.
ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள் என்று புதிதாக ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியல் இதே மாதிரி வேலையைப் பார்த்தால், அப்போதைய ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்தோம்; திருத்தினோம்.
இப்போது மறுபடியும் தமிழர்களுடைய சுயமரியாதையை உரசிப்பார்க்கிறார்கள்.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி அளியுங்கள் என்று தில்லியல் கேட்ட மாதிரி, இந்த விஷயத்திலும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்தில்தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் தயங்குவது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Udhayanidhi Stalin, the Leader of the Opposition in the Legislative Assembly, has condemned the display of a portrait of Thiruvalluvar clad in saffron attire at the Tamil Nadu Governor's official residence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீசாலும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதி ஸ்டாலின்






