தமிழகத்தில் திறமையான வீரா், வீராங்கனைகளைக் கண்டறிய திறனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதா் அா்ஜூனா தெரிவித்துள்ளாா்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விளையாட்டுத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அமைச்சா் கூறியது: தமிழக முதல்வா் எதிா்கால தேவைகளை கருத்தில் கொண்டு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருகிறாா். அந்த
வகையில் விளையாட்டுத் துறையில் எதிா்வரும் காலங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் தொடா்புடைய விளையாட்டுத் துறை அரசு உயா் அலுவலா்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
2026-27 ஆண்டில் விளையாட்டுத் துறையால் மேற்கொள்ளப்படவுள்ள உள்கட்டமைப்பு பணிகள், அரசுத் துறை ஒதுக்கீட்டில் விளையாட்டுத் வீரா்களுக்கான 3 சதவீத பணி வாய்ப்புகள் வழங்குவது குறித்தும், உயரிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், விளையாட்டு விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள் குறித்தும், விளையாட்டு வீரா்களுக்கான நிதி உதவி திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விளையாட்டுத் துறையில் வீரா், வீராங்கனைகள் சாதனை படைக்க பொருளாதாரம் இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது, என்ற அடிப்படையில் அதற்கு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது. பள்ளி பயிலும் காலங்களிலேயே விளையாட்டில் சிறந்து விளங்கிவரும், ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் தேவையான பயிற்சிகளை வழங்கி சாதனையாளா்களாக திகழச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதல்கட்டமாக திறன் ஆய்வு பிரிவு (பஹப்ங்ய்ற் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ரண்ய்ஞ்) தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் எவ்வித பரிந்துரையும் இல்லாத வகையில் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சிறந்த வீரா்களை அடையாளம் காணும் வகையில் இக்குழு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றாா்.
ஆய்வின் போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரா. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா, துணை பொது மேலாளா் நோயளின் ஜான், நிா்வாக பொறியாளா் புஷ்பலிங்கம் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2029 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பளிக்க கோரிக்கை: மத்திய அமைச்சரிடம், தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜூனா மனு

வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஆய்வு

2028 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்து அனுப்ப நடவடிக்கை: ஆதவ் அர்ஜூனா
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரா், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்: விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



