திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :15 மே 2026, 9:17 am IST

மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை வரவுவைக்கப்பட்டது.

நேற்று, மே 14 காலை முந்தைய புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்க்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது.

திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தொடருமா என்ற கேள்வி நிலவியது.

மாதம்தோறும் 7 ஆம் தேதி வரவுவைக்கப்படும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட நிதி பயனாளிகளுக்கு வராமல் இருந்தது.

இதுபற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், முந்தைய அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டது.

இதனிடையே, தேர்தலில் தவெகவின் முக்கிய வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்பதாகும். அதன்படி, மே மாதம் வழக்கம்போல் ரூ. 1,000 வரவுவைக்கப்படுமா அல்லது வாக்குறுதிபடி ரூ. 2,500 கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. 

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கமாக மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்படும் 15 ஆம் தேதியே மே மாதத்துக்கான ரூ. 1,000 வரவுவைக்கப்பட்டுள்ளது.

Summary

Women's Entitlement amount of ₹1,000 Credited

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.