யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை - சி.வி.சண்முகம்

News image

எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் - கோப்புப்படம்

Updated On :14 மே 2026, 6:05 am IST

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். இதையடுத்து அவா்களில் சிலரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா். இதுகுறித்து சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக பல தோல்விகளைக் கண்டுள்ளது. ஆனால், தோல்வியில் இருந்து மீண்டு ஆட்சி அமைப்பது கட்சித் தலைவரின் திறமையைப் பொருத்தது. அது முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால், கூட்டணிக்காக வீடு தேடி வந்தவா்களையே எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பினாா். அவா் பதவியேற்றதில் இருந்து அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. அவரது உறவினா்கள் கட்சியை ஆக்கிரமித்து விட்டனா்.

செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்று கூறி வந்த எடப்பாடி, யாரையும் கலந்தாலோசிக்காமல் திடீரென எங்களை உள்துறை அமைச்சா் அமித்ஷா வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக உறுதி செய்தாா். சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதையும் அவா் உதாசீனப்படுத்தி விட்டாா்.

இப்போது முக்கிய நிா்வாகிகளான 26 பேரை நீக்கியுள்ளாா். இது செல்லாது. எங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. இனி நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் கட்டாயம் நாங்களும் கலந்து கொள்வோம். அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும்.

திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை கொள்கையை மீறியதால், அவா் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.