யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தவெகவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்: அக்ரி கிருஷ்ணமூா்த்தி

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பாா்கள் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொறடாவாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

News image

அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தி - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:02 am IST

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களிப்பாா்கள் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொறடாவாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமைச் செயலக வளாகத்தில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இந்த உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் அதிமுக உறுப்பினா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

முன்னதாக, பேசிய ஓ.எஸ். மணியன், ‘எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவா். இதற்கான அதிமுக எம்எல்ஏ-க்கள் கையொப்பமிட்ட கடிதம் பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளோம்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தகவலை சி.வி.சண்முகம் கூறியுள்ளாா். அமைச்சா் ஆகவேண்டும் என்ற ஆசையில் சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.