தமிழ் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் 33% வாக்களித்துள்ளதாகவும், எஞ்சிய 66% வாக்குகள் எதிர்க்கட்சியினருக்கே கிடைத்துள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 13) தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க செயல்படுவதுதான் எங்கள் நோக்கம் எனக் கூறினார்.
முதல்வர் முன்மொழிந்தால் அதை ஏற்கிறேன், அல்லது எதிர்க்கிறேன் என்று வழிமொழிவதுதான் மரபு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அவையில் 4 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் வந்துள்ளது. ஏன் நம்பிக்கை; ஏன் நம்பிக்கை இல்லை எனப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசின் தீர்மானம் என்ற காரணத்தால் வழிமொழியத் தேவையில்லை.
அதிமுகவில் 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். ஆளும் கட்சிக்கு 33 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துள்ளன. 66% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
அதிமுகவின் ஒரு தரப்புக்கு மட்டும் விஜய் ஆதரவு தருவது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால் அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான அடித்தளம் அதிமுக அமைத்ததுதான் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
33% of Votes for TVK; 66% for Opposition Parties: EPS Speaks in the Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









