தமிழ் செய்திகள்
திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"இன்று அனைத்துக் கட்சிகளும் உடைந்து விட்டது. திமுகதான் நிலையான கட்சி. அதனால் எங்களுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை.
திமுக - அதிமுக கூட்டணி என்பது யூகம், அது ஒரு வதந்தி.
60 ஆண்டு காலமாக ஒரே கட்சிகள் ஆட்சி செய்கின்றன என்று கூறிய விஜய், இப்போது அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை தன்னுடைய கட்சியில் சேர்க்க போகிறாரா? சி.வி. சண்முகம் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தரப்போகிறாரா? என்பதை விஜய்யிடம் நீங்கள் கேட்க வேண்டும்.
சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தொடர்ந்து பதவியில் இருந்தவர். சிலருக்கு பதவி வெறி இருக்கும். அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக செல்வதற்கு இப்போது திமுகவை காரணம் காட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் கட்சி மாறுவது, மைனாரிட்டி ஆட்சி என இதுவரை இல்லாத விஷயங்கள் நடந்து வருகிறது. திமுகவைப் பொருத்தவரை எந்த முடிவு வந்தாலும் நாங்கள் நிலையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
Summary
Did alliance talks take place between DMK and AIADMK, R.S. Bharathi responds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










