தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி பெற்றுள்ளதாக அவரின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய்யின் வெற்றியால் ஒரு தந்தையாக பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது:
விஜய்யின் வெற்றியை மக்கள் கொண்டாடுகின்றனர். விஜய்யின் வெற்றியால் ஒரு தந்தையாக பெருமை கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவராக விஜய்யை மக்கள் பார்க்கின்றனர். இதனால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளிலும், அதிமுக 71 தொகுதிகளிலும், திமுக 59 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
Summary
Vijay's Success Surpasses Expectations: Chandrasekhar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எல்லா தந்தைக்கும் இது கிடைப்பதில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க பேச்சு

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

விஜய் வெற்றிக்காக திருத்தணி முருகன் கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் தியானம்!






