சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் (அன்புமணி பிரிவு) வேட்பாளர் செளமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிவனை விட 20 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளிலும், திமுக 53தொகுதிகளிலும், அதிமுக 44தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி, தவெக 8 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெகவின் சிவனை விட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Summary
Sowmya Anbumani wins in Dharmapuri
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி!







