தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு!

புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 5:35 am

புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி, மாநில சட்டம் - ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்.

மனுவின்படி, ஏப்ரல் 5 ஆம் தேதியில் புதுச்சேரியில் காலாப்பட்டு நுழைவாயில், முதியால்பேட்டை மணிகுண்டு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, உப்பளம் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் மார்ச் 28 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், 300 பேர் மட்டுமே கூடுவதற்கு உகந்த இடத்தில் 3,000 பேருக்கு அனுமதி தர முடியாது என தவெகவின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Summary

TVK Petitions for Permission for Vijay's Campaign in Puducherry!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.