திமுக ஆட்சியில் தரமற்ற மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு மடிக்கணினி ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலையேற்றுள்ள அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக, அமமுக, தமாக, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிதாக இணைந்துள்ள சிங்கத் தமிழர் முன்னேற்றக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டுள்ளது.
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''அதிமுக அரசு தமிழ்நாட்டில் 68 கல்லூரிகளைக் கொடுத்தது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை அதிமுக அரசு கொண்டுவந்தது. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரப்படவில்லை.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலத்தில் கொண்டுவரப்பட்டது. பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில்தான் மடிக்கணினி கொடுத்தோம். இந்தியாவிலேயே யாரும் கொண்டுவராத இந்தத் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தினார்.
ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம். அதை முடக்கியது திமுக அரசு. ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் அமைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் தரமற்ற லேப்டாப் கொடுக்கப்பட்டன. திமுக அரசின் லேப்டாப் ஊழல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும்.
சிறப்பாக செயல்பட்டதற்காக மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது பெற்றோம். மத்திய அரசின் அதிக விருது பெற்ற நிர்வாகம், அதிமுக நிர்வாகம்தான்.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 2 ஆயிரம் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் மூன்று வேளையும் உணவு கொடுத்தோம்.
கரோனா பெருந்தொற்று, வெள்ளம் போன்ற சூழலில் ஒரு ரூபாய் வரி வசூலிக்காதபோது கூட சிறப்பான நிர்வாகம் அளித்த அரசு, அதிமுக அரசுதான். ஆனால், எந்தவித இடர்பாடுகளும் இல்லாதபோது கூட மோசமான நிர்வாகத்தை அளித்துள்ளது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
Laptops Corruption Under DMK Rule Commission to Investigate Corruption Edappadi Palaniswami
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை தடுத்து திமுக துரோகம் இழைத்துவிட்டது! - எடப்பாடி கே.பழனிசாமி

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும் எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



