மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்து...

News image

கிருஷ்ணசாமி - எக்ஸ்

Updated On :29 மார்ச் 2026, 10:23 am

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி முதல் கட்டமாக 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால், தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணித் தொகுதிப் பங்கீடுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகளிடையே முடிவடைந்துள்ளன.

தற்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களையும் இன்று இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

இதன்படி, கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி, 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி பேசியதாவது:

''அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 3 பேரவைத் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தேன்.

9 இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் இல்லை, கன்னியாகுமரியில் 4% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது இபிஎஸ்ஸுக்குத்தான் தெரியும்.

எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகே தனித்துப் போட்டியிடும் முடிவை புதிய தமிழகம் எடுத்தது. புதிய தமிழகம் கட்சி 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும்'' என கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

Summary

Krishnasamy son shiyam to Contest in Nellai and Srivilliputhur Constituencies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.