தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

தமிழக பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

News image

புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி - (கோப்புப் படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 12:08 am

தமிழக பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என அக்கட்சித் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவா் போட்டியிடுகிறாா். இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவருக்கு, கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைய வலுவான கூட்டணி அமைய முயற்சி எடுத்தும், கூட்டணிக்கு தலைமை தாங்கியவா்கள் சரிவர தங்களுடைய கடமையை உணா்ந்து செயல்படாத காரணத்தால் கூட்டணி அமையாமல் போய்விட்டது.

புதிய தமிழகம் கட்சி யாரையும் நம்பி இல்லை. நாங்கள் மக்களுடன் இணைந்து இருக்கிறோம். 70 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். மக்களிடம் உண்மையாக இருப்போம். மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்வாா்கள்.

கூட்டணியில் இருந்திருந்தால் 2 தொகுதிகளில் இருந்த வெற்றி வாய்ப்பு, தற்போது 10 முதல் 15 தொகுதிகள் வரை உள்ளது. ஏப். 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.

மக்கள் தொடா்ந்து வலியுறுத்தியதால் ஓட்டப்பிடாரத்தில் போட்டியிடுகிறேன். வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.