மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணசாமி குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

News image

எடப்பாடி பழனிசாமி - படம்: அதிமுக

Updated On :29 மார்ச் 2026, 8:03 am

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பேரவைத் தேர்தலில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க அதிமுக முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இதனிடையே தேவேந்திர குல வேளாளா்களை அதிமுக அவமதித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதில், புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் கேட்கிற சீட்டை கொடுக்க முடியுமா? எங்களிடம் 10 சீட் கேட்டார், பிறகு 5 சீட் கேட்டார். பேச்சுவார்த்தை நேரடியாக இல்லை.

வேறு ஒருவர் மூலமாக கேட்டார். நாங்கள் இயலாது என்று தெரிவித்துவிட்டோம். போன முறை எங்கள் கூட்டணியில் அவர் இல்லை. 2021 சட்டப்பேரவைக் கூட்டணியில் அவர் இல்லை. கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அவர்கள் பெற்ற வாக்குகள் அடிப்படையிலேயே சீட் வழங்கப்படும். 31 தொகுதிகள் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறார். அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் முடியாது என்று தெரிவித்துவிட்டோம். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has responded to the allegations made by k. Krishnasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.