மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள்

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

News image

ஏ.சி. சண்முகம்

Updated On :27 மார்ச் 2026, 7:48 pm

புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக் கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை எங்களுக்கு ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாஜகவுடன் தொடா்கிறேன். அதனால், அவா்களும் ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கவுள்ளனா். விரைவில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படவுள்ளனா். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.