புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியும், பாஜக ஒரு தொகுதியும் ஒதுக்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து சென்னையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக் கட்சியின் தலைவா் ஏ.சி.சண்முகம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக சாா்பில் புதிய நீதிக் கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமை எங்களுக்கு ஒரு தொகுதியை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதிமுக எனது தாய் வீடு. தாய் வீட்டின் சீதனமாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நான் புகுந்த வீடாக பாஜகவுடன் தொடா்கிறேன். அதனால், அவா்களும் ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கவுள்ளனா். விரைவில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படவுள்ளனா். அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், பாஜக ஒதுக்கவுள்ள தொகுதியில் தாமரை சின்னத்திலும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கூடுதல் எம்.பி. தொகுதி: அன்று கருணாநிதி தடுத்தாா்; இன்று ஸ்டாலின் தடுக்கிறாா்! கே. அண்ணாமலை!!
புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம்

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


