மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கட்சியிலிருந்து விலகும் பெண்கள் மீது களங்கம், அவதூறு! தவெக மீது மகளிர் ஆணையத்தில் புகார்

தவெகவிலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார்

News image

ரஞ்சனா நாச்சியார் - விடியோ க்ளிப்

Updated On :27 மார்ச் 2026, 9:09 am

தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளருடன் ரஞ்சனா நாச்சியார் பேசுகையில், “நான் முன்னதாக தவெகவில் இருந்தேன். ஆனால், பெண்கள் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத சில கருத்துகளை அக்கட்சியின் தலைவர் மேடையில் கூறியதால், அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்.

கட்சித் தொண்டர்களைச் சந்திக்க அவர் ஒருபோதும் தயாராக இல்லை.

யூடியூப் விடியோக்கள் மூலம் தொடர்ந்து என் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததுடன், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கட்சியைவிட்டு வெளியேறும் அனைத்து பெண்களும், மோசமான வார்த்தைகளால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

விஜய் அவரது தொண்டர்களின் இவ்வாறான செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிய பெண்கள் மீதான அவதூறு பரப்பப்படுவதை நிறுத்த விஜய் பொறுப்பேற்க வேண்டும்.

இதனாலேயே, அக் கட்சியிலிருந்து வெளியேற பெண்கள் பயப்படுகின்றனர்.

வாக்குகளைப் பெறுவதற்காக விஜய் அரசியல் நாடகம் போடுகிறார். பொறுப்பற்ற தலைவரை தமிழக பெண்கள் தேர்வுசெய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Summary

TVK Vijay has to take accountability to stop abusing women who quit his party, says DMK Leader Ranjana Nachiyar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.