அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஆளுங்கட்சியின் கோட்டை! பெரம்பூரில் விஜய் களமிறங்கினால் எப்படியிருக்கும்?

ஆளுங்கட்சியின் கோட்டையாக விளங்கும் பெரம்பூரில் விஜய் களமிறங்கினால் எப்படியிருக்கும்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 6:11 am

ஆளும் திமுகவின் கோட்டையாக விளங்கும் பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால், தேர்தல் களம் எப்படியிருக்கும் என்பது குறித்து பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன.

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான பேச்சுகள் தொடங்கியபோதே, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின. இன்னமும் அதேக்கூற்று நிலவுகிறது.

சென்னையின் பழைமையான தொகுதிகளில் பெரம்பூரும் ஒன்று. கடந்த 2006 பேரவைத் தேர்தல் வரை தனித் தொகுதியாக இருந்தது. 2008-இல் தொகுதி சீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியது. இங்கு திமுக 9 முறையும் மார்க்சிஸ்ட் 3 முறையும் அதிமுக 2 முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது பெரம்பூர் தொகுதி ஆளுங்கட்சியின் கோட்டையாக உள்ளது.

மற்ற தொகுதிகளைப் போலவே இருந்த பெரம்பூர் தொகுதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதுதான் கூடுதல் கவனம் கிடைத்தது.

இதையடுத்தே, தவெக தலைவர் விஜய் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில் அவர் ஒரு பங்களாவை வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. அது உறுதி செய்யப்படவில்லை. அது வேறுகதை.

பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதும் மும்முரமாகியிருக்கிறது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தற்போது பாமகவுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் இளம்தலைமுறையினர் அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன. அதாவது அங்குள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 75,000 பேர் இளம்தலைமுறை வாக்காளர்கள். இங்கு, விஜய்யின் தவெக கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக 45,000 பேர் இருக்கிறார்கள். இந்த 75 ஆயிரம் பேரில்தான் இந்த 45 ஆயிரம் பேரும் இருக்கிறார்களா? 45 ஆயிரம் பேருக்கும் வாக்குரிமை இந்தப் பகுதியில்தான் உள்ளதா? 75 ஆயிரம் பேரை மட்டுமே நம்பி விஜய் இந்தத் தொகுதியில் நிற்க முடியுமா? என்பதெல்லாம் தவெகவினர்தான் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள, பல சமூகங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியான பெரம்பூர் திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்கு திமுக 9 முறை வென்றுள்ளது. கடந்த 2019 இடைத் தேர்தலில் திமுகவின் ஆர்டி சேகர் வெற்றி பெற்றிருந்தார். கடந்த 2021 தேர்தலில் 1.05 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக களமிறங்குகிறது. எனவே, இந்த முறை திமுக கூட்டணியில், பெரம்பூர் தொகுதி சிபிஎம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படுமா? சபாஷ் சரியான போட்டி என்பதைப் போல உருவாக்க திமுக நேரடியாகக் களமிறங்குமா? என்பது மட்டுமே இப்போது விடை தேடப்படும் கேள்வியாக உள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமக தரப்பில் சென்னையில் தங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரம்பூர் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் பாமக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பெரம்பூர் ஏன்? தவெக தலைமை, சென்னையில் அதிக மக்கள் வாழும், அரசின் கவனம் அதிகம் தேவைப்படும் பகுதிகளில்தான் விஜய் போட்டியிட வேண்டும் என்று கருதுகிறது. அதற்காகவே வட சென்னை முதல் தெரிவாகவும் இருந்தது. பெரம்பூர், கொளத்தூர் அல்லது ஆர்கே நகர் தொகுதிகள் பரிசீலிக்கப்பட்டன. அதில் முதல் தெரிவாக பெரம்பூரே இருந்துள்ளது.

தவெக வேட்பாளர் பட்டியல் இன்னமும் வெளியாகவில்லை. 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகளின்படி கூட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்காததால், இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்-யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கும் இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், சென்னையில் ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வரும் அமைச்சர் சேகர்பாபுவிடம், விஜய் பெரம்பூரில் போட்டியிட்டால்? என்று கேட்டதற்கு, பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும் பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை. வந்தார், சென்றார் என்ற அளவில்தான் இருக்கும். முதல்வர் மு.க. ஸ்டாலின் அபிமன்யு வியூகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். அதை உடைக்கும் சக்தி அதிமுகவுக்கு இல்லை என்று பதிலளித்திருந்தார்.

எனவே, அனைவரது பார்வையும் கவனமும் திரும்பியிருக்கும் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால், தேர்தல் களத்தில் நட்சத்திர தொகுதிகளின் வரிசையில் இடம்பெறுவதோடு, ஒரு கட்சியின் தலைவர் போட்டியிடுகிறார் என்பதால், அப்பகுதி மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

விஜய் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டால், திமுகவும் நேரடியாக களத்தில் இறங்கி தங்களது கோட்டையைத் தக்கவைக்க தீவிரம் காட்டலாம்? மிகவும் சவாலான தொகுதியாக பெரம்பூர் மாறலாம்.

Summary

What if Vijay contests from Perambur, a stronghold of the ruling party?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.