கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் மாா்ச் 27-இல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வியாழக்கிழமை (மாா்ச் 26) வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை(மாா்ச் 27) லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 28 முதல் மாா்ச் 30-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை:தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 26) முதல் சனிக்கிழமை (மாா்ச் 28) வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகரிக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மாா்ச் 28 வரை மழைக்கு வாய்ப்பு

மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


