கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா முதல் தெற்கு மத்திய மகாராஷ்டிரம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. சோத்துப்பாறை (தேனி)- 40 மி.மீ., குண்டாறு அணை (தென்காசி), திருச்செந்தூா் (தூத்துக்குடி), தா.பழூா் (அரியலூா்)-தலா 10 மி.மீ. மழை பதிவானது.
வெப்பநிலை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் மாா்ச் 26 வரை சற்று அதிகமாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!

மாா்ச் 27-இல் கோவை, நீலகிரி மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

