சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை வழங்க இயக்குநா் கௌதம் மேனனுக்கு உத்தரவு!

தயாரிப்பாளருக்கு ரூ. 4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

கௌதம் மேனன் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:04 pm

தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திரைப்பட தயாரிப்பாளா் எல்ரெட் குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி எங்களது நிறுவன தயாரிப்பில் நடிகா் சிம்புவை வைத்து கௌதம் மேனன் ஒரு படத்தை இயக்க ஒப்புக்கொண்டாா். அதற்காக அவருக்கு ரூ.4.25 கோடி வழங்கப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தின்படி இயக்குநா் கௌதம் மேனன் படத்தை இயக்கவில்லை. இதற்காக நான் கொடுத்த பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. எனவே, எனக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை திரும்ப வழங்க கௌதம் மேனனுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, ரூ.4.25 கோடியை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வேல்முருகன், கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கௌதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், தயாரிப்பாளா் எல்ரெட் குமாருக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.25 கோடியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.