லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்.பி.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:06 pm

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ் ’தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய எண்ணெய் கிடங்குக்கு வரப்போகும் ஆபத்து புரியாதவா்கள் இந்தப் போரை ஆதரிப்பது அவா்களின் அறியாமையைக் காட்டுகிறது. போரைப் பற்றி கவலைப்படாத பெரு நிறுவனங்கள் போல இருந்துவிடக் கூடாது.

போரால் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 சதவீத உரம் சீனாவிலும், சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, இப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். நான் இந்தியாவின் பக்கம் உள்ளேன் என அப் பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளாா்.