தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மக்கள் நலனுக்காகவும் இபிஎஸ் தில்லி செல்ல வேண்டும்: செல்வப்பெருந்தகை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது குறித்து...

News image

செல்வப்பெருந்தகை - விடியோ க்ளிப்

Updated On :20 மார்ச் 2026, 11:08 am

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தில்லி செல்ல வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசுகையில், "அவர் (இபிஎஸ்) அடிக்கடி தில்லிக்கு செல்கிறார். அவர் தில்லி செல்லலாம். ஆனால், தமிழ்நாட்டின் உரிமைகளையும் தில்லியில் அவர் கேட்க வேண்டும்.

சமக்ர சிக்‌ஷா, ஜல் ஜீவன், ஜிஎஸ்டி, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான நிதி நிலுவையில் உள்ளது.

அவர் தில்லி செல்கிறார் என்றால், அது மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும். தமிழக அரசுக்கான நிதி, இன்னும் பெரியளவில் நிலுவையில் உள்ளது.

இந்தத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் மற்றும் மக்களின் உரிமைகளுக்கு இடையிலான தேர்தலே" என்று தெரிவித்தார்.

முன்னதாக, எதிர்க்கட்சியினரை விமர்சித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், "தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் தில்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது தில்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

AIADMK Leader Edappadi Palaniswami should be asking for Tamil Nadu’s rights, says Selvaperunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.