கரூரில் நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து சிபிஐ கேள்வி எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தில்லியில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
”கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். சாட்சிகள் என்ற அடிப்படையில் அன்று நடைபெற்ற குறிப்பிட்ட சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். என்ன கேள்விகள் என்பதை பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. உரிய பதிலை விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளேன்.
களத்தில் நின்று பணியாற்றியதால், சிபிஐ சந்தேகங்களுக்கு பதிலளிப்பது பொறுப்பாக எடுத்துக் கொண்டு முறையான பதில் அளித்துள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனே சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக முன்னெடுத்து செய்து வருகின்றது. தொடர்ச்சியாக மாநாடு நடத்தி வருகிறோம். ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வராகும் சூழல் இருக்கிறது. மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிஷங்களில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்துக்கு வந்தது குறித்தும், பிறகு தவெக நிர்வாகிகள் செய்த ஏற்பாடுகள் தொடர்பாக செந்தில் பாலாஜி பொதுவெளியில் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் மீது தவெக நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் கேள்களை கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
What happened in the CBI investigation? Senthil Balaji explains!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி!

தொகுதி மாறிய செந்தில் பாலாஜி, போடியில் ஓபிஎஸ் போட்டி!

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



