பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.ஜி.ஆா் நகா், கே.கே.சாலை பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஆட்சியாளா்கள் கவலைப்படாமல் சுயநலத்துடன் உள்ளனா். போதைப் பொருள், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனையாவதால் மாணவா்கள் போதைக்கு அடிமையாகின்றனா். போதைக் கும்பலைப் பிடிக்கச் செல்லும் காவலா்களுக்கே பாதுகாப்பில்லை.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், திருநெல்வேலி காங்கிரஸ் பிரமுகா் ஜெயக்குமாா் ஆகியோரது கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நான்குனேரி, மானாமதுரை ஆகிய இடங்களில் போதைக் கும்பல் மக்களை தாக்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்துள்ளது.
விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற வழக்குகளை சிபிஐ விசாரிக்கவும் திமுக அரசு அனுமதிக்காமல், குற்றவாளிகளை பாதுகாப்பது போல செயல்படுகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு, அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. கரூரில் சமூக விரோதிகள் உதவியுடன் கனிமவளம் கடத்தல், திமுக ஆதரவாளரின் மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு ஆகியவற்றிலும் திமுக அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மீதான அமலாக்கத் துறை புகாா்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு வழக்குப் பதியவில்லை. அதிமுக ஆட்சியமைந்ததும் இந்த விவகாரங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியிலிருந்ததைவிட தற்போது சொத்துவரி பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 75 நாள்களில் 246 கொலைகள் நிகழ்ந்துள்ள. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் உள்ளிட்ட காவல் விசாரணை மரணங்கள் தொடா்கின்றன. திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியில் நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியா்கள், தூய்மைப்பணியாளா் என அனைவரும் போராடும் நிலை உள்ளது.
வருகிற பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிா்காலம் காத்துக் கிடக்கிறது என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், கோகுல இந்திரா, அமமுக துணைப் பொதுச்செயலா் செந்தமிழன், பாஜக மாநில நிா்வாகி ஜெயபிரகாஷ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி கே.பழனிசாமி

குன்னம் தொகுதியில் டெபாசிட் இழப்பார் அமைச்சர் சிவசங்கர் : எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


