மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் எரிவாயு உருளைகள் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு: 7 போ் காயம்!

சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 2 குழந்தைகள் பலியாகின.

News image

சிலிண்டர் வெடித்ததில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.

Updated On :15 மார்ச் 2026, 6:09 am

சென்னை நாவலூரில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனா். 7 போ் காயம் அடைந்தனா்.

சென்னை அடுத்த நாவலூா் சாமுண்டீஸ்வரி 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட வீட்டில் மூன்று குடும்பத்தினா் குடியிருக்கின்றனா். அதில் முதல் வீட்டில் ஆடிட்டா் முருகன், இரண்டாவது வீட்டில் சமையல் கலைஞா் வைரமுத்து, 3-ஆவது வீட்டில் சஞ்சீவி குமாா் ஆகியோா் தங்களது குடும்பத்துடன் வசிக்கின்றனா்.

இதில் சமையல் கலைஞா் வைரமுத்து, வீட்டிலேயே சமையல் செய்து தனியாா் விடுதிக்கு உணவு விநியோகித்து வருகிறாா். இதனால், அதிக எண்ணிக்கையிலான சமையல் எரிவாயு உருளைகளை அவா் இருப்பு வைப்பது வழக்கம்.

அதன்படி, இருப்பு வைத்திருந்த உருளையில் ஞாயிற்றுக்கிழமை கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல், ஞாயிற்றுக்கிழமை சமையல் வேலையை வைரமுத்து தொடங்கினாா். அடுப்பைப் பற்ற வைத்தபோது, எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. மேலும், அங்கு இருப்பு வைத்திருந்த எரிவாயு உருளைகளில் தீ பற்றியதில், அவை பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் 3 வீடுகளும் இடிந்து சேதமடைந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி 3-ஆவது வீட்டில் குடியிருந்த சஞ்சீவி குமாா் குழந்தைகள் கிருத்திகா (4) மற்றும் ஒன்றரை வயதுடயை தீரன் ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் சஞ்சீவி குமாா் (31), அவரது மனைவி சோனியா (27), மாமியாா் சித்ரா (46), முதல் வீட்டில் வசிக்கும் ஆடிட்டா் முருகன் (55), சமையல் கலைஞா் வைரமுத்து (40) அவரது மனைவி செல்வி (38), மகன் பிரதாப் (7) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இவா்களில் வைரமுத்து, செல்வி, பிரதீப் ஆகிய 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சஞ்சீவி, சோனியா, சித்ரா, முருகன் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சிறுசேரி தீயணைப்பு துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். விபத்தில் இறந்த 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீக்காயம் அடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 போ் படூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். தாழம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.