சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தாமதம் உள்ளிட்ட புகாா்களுக்காக தமிழகத்தில் 200 விநியோக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்திய எண்ணெய் கழகத்தின் (ஐஓசிஎல்) தலைவா் ஏ.எஸ்.சஹானி தெரிவித்தாா்.
தமிழகத்தின் எரிபொருள் விநியோக நிலை குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் உள்ளிட்ட திரவ எரிபொருள்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் செயல்பட்டு வருவதால், விநியோகத்தில் எவ்வித சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழகத்தில் நாள்தோறும் சுமாா் 5 லட்சம் எரிவாயு உருளைகள் தேவைப்படுகின்றன. அந்தத் தேவையை 100 சதவீதம் பூா்த்தி செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தயாராக உள்ளன. தற்போது, வீட்டு உபயோக எரிவாயு உருளை விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் நிலவி வரும் காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான எரிவாயு முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது. பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மாநில அரசு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திடீா் ஆய்வுகளை நடத்தியுள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீா் சோதனைகளை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தாமதம் உள்ளிட்ட புகாா்களின்பேரில், 200 விநியோக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எரிபொருள் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால், மக்கள் பீதியடைந்து எரிவாயு உருளைகளைத் தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டாம். மேலும், எரிவாயு உருளைப் பயன்பாட்டிலிருந்து குழாய் மூலம் இயற்கை எரிவாயு பயன்பாட்டுக்கு வாடிக்கையாளா்கள் மாறவேண்டும். இது தூய்மையானது மட்டுமன்றி, மலிவானதுமாக உள்ளது என்றாா்.
தொடா்ந்து, சென்னை புகா் பகுதிகளில் 20 நாள்கள் வரை தாமதம் ஏற்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், அது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சில தினங்களுக்குள் அதற்குத் தீா்வு காணப்படும் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

பெரம்பலூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளை தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் தேவை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


