ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தந்தை உயிரிழந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவர்!

+2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News image
Updated On :9 மார்ச் 2026, 8:03 am

தந்தை உயிரிழந்த சோகத்திலும் +2 பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியினர். இவர்களுடைய மகன் சாய்நிஷாந்த் (17).

சாய்நிஷாந்த் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை ‌அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச் 6) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு நடைபெறுவதால், தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் வேதியியல் தேர்வு எழுத சென்றுள்ளார்.

சாய்நிஷாந்த் தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தனது தந்தை காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார். பள்ளிக்கு சென்ற மாணவன் சாய்நிஷாந்தைப் பார்த்து, சக நண்பர்களும் கட்டியணைத்து அழுதனர்.

Summary

Many are praising the student's actions in writing the +2 public exams despite the tragedy of his father's death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.