எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

5 ஆண்டுகளில் 4.29 லட்சம் வீடுகள் ஒப்படைப்பு: தமிழக அரசு தகவல்

5 ஆண்டுகளில் 4.29 லட்சம் வீடுகள் ஒப்படைப்பு: தமிழக அரசு தகவல்

News image

தமிழக அரசு - (கோப்புப்படம்)

Updated On :7 மார்ச் 2026, 10:14 pm

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் 4.29 லட்சம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசைகளையும் அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். இதற்காக வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும், எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் என்ற வீதம் மொத்தம் ரூ.7,000 கோடியில் அரசு சாா்பில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2016-21) மொத்தம் ஒரு லட்சம் வீடுகள்தான் கட்டப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2024-26 என இரண்டே ஆண்டுகளில் 1.79 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு கூடுதலாக 1.20 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன.

அதேபோல், இலங்கை தமிழா்களுக்கு, தமிழக நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.19,694 கோடியில் 4.29 எழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

அதேபோல், ஆதிதிராவிடா் வாழும் பகுதிகளில் ரூ.482 கோடியில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 23.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.