இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? - முதல்வர் விஜய்

கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது குறித்து...

News image

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய். - படம்: விடியோ கிளிப்

Updated On :23 ஜூன் 2026, 12:05 pm IST

கலைஞர் படத் திறப்பு விழாவில் தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பேரவையில் கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் இன்று(ஜூன் 23) பதிலளித்து சட்டப்பேரவையில் பேசினார்.

அப்போது பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடியது தவறு, தேசிய கீதம் இரண்டு முறை பாடியது தவறு. இதுபோன்ற ஒரு நிகழ்வு சட்டப்பேரவையில் நடந்ததே இல்லை. அந்த மரபை மாற்றிவிட்டீர்கள், அந்த மாநில உரிமைப் போராளிகளை, அந்த மரபு காக்கும் போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்.

கடந்த 2021 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் வெளியிட்ட விழாவில், தேசிய கீதம் பாடப்பட்ட பிறகு இரண்டாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவித்தார்கள்.

அது ஞாபகம் இல்லையா? தமிழை இரண்டாவது இடத்தைத் தள்ளியது யார்? இரண்டாவது முறையும் தேசிய கீதம் பாடப்பட்டது. அவைக்குறிப்பிலும் இருக்கிறது, சந்தேகம் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “மொழி மொழி என்று கூறி இரட்டை வேடம் போட மாட்டோம், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவர் ஈவில்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அதை டெவில்ஸ் பேசக் கூடாது” என்றார்.

Summary

Chief Minister C. Joseph Vijay raised a question in the Assembly as to why the National Anthem was sung twice at the unveiling ceremony of the Kalaignar portrait.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.