புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஹூப்ளி - ராமேசுவரம் ரயில்கள் ஜூலை வரை நீட்டிப்பு

கா்நாடக மாநிலம் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:55 am IST

கா்நாடக மாநிலம் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் வரும் ஜூலையில் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்ளியில் வரும் ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 6.50 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) மறுநாள்களான 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.20 மணிக்கு ராமேசுவரம் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வரும் ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 07356) மறுநாள் ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தைச் சென்றடையும்.

அதேபோல, கொல்லம்-ஹூப்ளி இடையேயும் வரும் ஜூலை 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.