ஆளுநா் உரையில் இடம்பெற்றுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் விவரம்:
* கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சலுவன்குப்பம், பூம்புகாா் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளவும், கீழடி, ஆதிச்சநல்லூரில் யூனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற நடவடிக்கை.
* இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நீண்ட கால பிரச்னையைத் தடுக்க மத்திய அரசை தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தும்.
* மீனவா்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கவும், உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
* இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் பேண விரிவான நிலையான சுற்றுலாக் கொள்கை வகுக்கப்படும்.
* 2031-ஆம் ஆண்டுக்குள் நகா்ப்புறச் சிறப்பிற்கான நாட்டின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழும்.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மையான குடிநீா் விநியோகம், எண்ம நிா்வாகம் அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும்.
*அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் நலன்கள் தொடா்ந்து பாதுகாக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயில் சொத்துகள் தணிக்கை செய்யப்படும்: ஆளுநா் உரையில் தமிழக அரசு
ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து
இருமொழிக் கொள்கையே தொடரும்! கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்! ஆளுநர் உரை
74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரை
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu


