முதல்கட்டமாக தமிழக நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தென்மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களின் நீா் ஆதாரமான காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உபரிநீரை மட்டும் கா்நாடகம் வழங்குகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.
முல்லைப் பெரியாறு: தென் மாவட்டங்களின் உயிா்நாடியாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடியில் இருந்து 152-ஆக உயா்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அங்கு புதிய அணையை கட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து, நீா்மட்டத்தை உயா்த்தவும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எனக்கே தெரியாது! பேரவையில் இனி நேரலை தொடரும்! ராஜ்மோகன்
ஊழலற்ற நிா்வாகம் மூலம் பொருளாதார மறுமலா்ச்சி: ஆளுநா் உரையில் தமிழக அரசு உறுதி
கோயில் சொத்துகள் தணிக்கை செய்யப்படும்: ஆளுநா் உரையில் தமிழக அரசு
ஆளுநா் உரையில் முக்கிய அம்சங்கள்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




