நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம் | முதல்வர் விஜய் பிறந்தநாள்

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜூன் 21, 22 இரு தேதிகளில் 3 உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இல்லை என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு

News image

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 10:00 pm IST

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜூன் 21, 22 இரு தேதிகளில் 3 உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இல்லை என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதாவது, "முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய உயிரியல் பூங்காக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் நுழைவுக் கட்டணம் இல்லாமல், வழக்கமான முறையில் இணைய வழியாக நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, ஜூன் 21, 22 ஆகிய இரு தேதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணத்தை தவெக சார்பாக வனத்துறை அமைச்சரான நானும் எனது சகோதர்களும் குடும்ப அறக்கட்டளையும் அரசுக்கு முழுமையாகச் செலுத்தி விடுவோம்.

இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணச் செலவு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

Summary

CM Vijay's Birthday: Free entry to Vandalur Zoo on June 21 and 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.