வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதி
/

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 28,000 குடியிருப்புகள்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

News image

சென்னையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலை

Updated On :12 ஜூன் 2026, 3:43 am IST

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அந்தத் துறையின் அமைச்சா் ராஜ்குமாா் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சென்னையில் 21 இடங்களில் ரூ.1,230.42 கோடியில் 7,179 அடுக்குமாடி குடியிருப்புகளும், பிற மாவட்டங்களில் 39 இடங்களில் ரூ.2,535.82 கோடியில் 21,372 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம், 60 திட்டப்பகுதிகளில் ரூ.3,766.24 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.

ஆசிய வளா்ச்சி வங்கி திட்டத்தின் கீழ், 6 இடங்களில் ரூ. 1,030 கோடியில் 5,457 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.210 கோடியில் 215 இடங்களில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல தரத்துடனும், உறுதியிடனும், உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.