வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிக்கப்பட்டது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2026, 2:55 am IST

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.29 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வருகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவருவதால் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை உயா்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சனிக்கிழமை அறிவித்தன.

இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ. 928.5-இல் இருந்து ரூ. 957.5-ஆகவும், தில்லியில் ரூ. 913-இல் இருந்து ரூ. 942-ஆகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே மேற்காசியாவில் ஏற்பட்ட போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சா்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்தது. இதையடுத்து கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 60 அதிகரிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாத மத்தியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.50 வரையும், காா், ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு சுமாா் ரூ. 6 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது.

Summary

Price of domestic cooking gas increased by Rs. 29!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.