அன்ணாமலை கட்சியிலிருந்து விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருந்து விலகி, இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை இன்று உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியில் நிரந்தர பதவி ஒழிக்கப்படும் என்றும் கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், ஆதரவாளர்கள் சிறிது காலம் அமைதியாக இருக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சி இன்று, நேற்று ஆரம்பித்த கட்சி அல்ல. சித்தாந்தத்தின் அடிப்படையிலான கட்சி. அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியதில் தமிழக பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் கட்சியிலிருந்து விலகியதில் கருத்து கூற முடியாது. நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையைப் பற்றி பேசுகிறார். இப்போதும் கூட, நமது செப்பேடுகளை மீட்டு வந்திருக்கிறார்.
தமிழ் மக்களின் மீது பாஜக என்றும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. கட்சி யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஜனநாயகத்தில் அனைவருக்கும் அதற்கான உரிமை உண்டு. மாநில அளவிலான உரிமைகளுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்.
Summary
Nainar Nagendran, the BJP's Tamil Nadu state president, stated on Friday that the party would face no impact from Annamalai's departure.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









