பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம்
பயிா் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுமானால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சா் ராம்நாத் தாக்குா் பதிலளித்தாா்.

ஜெகத்ரட்சகன்
நமது நிருபா்
பயிா் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுமானால் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் டாக்டா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சா் ராம்நாத் தாக்குா் பதிலளித்தாா்.
இது தொடா்பாக அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடும் வெப்ப அலை, நீா்ப்பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றங்களால் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024-ஆம் ஆண்டு காரீஃப் பருவம் முதல் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் காலதாமதம் செய்தால் அவற்றுக்கு 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல, 2025-ஆம் ஆண்டு காரீஃப் பருவம் முதல் மாநில அரசுகள் அவற்றின் மானியப் பங்கை தாமதமாக வழங்கினாலும் 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 63.01 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் 55.83 லட்சம் சிறு விவசாயிகளும், 5.38 லட்சம் குறு விவசாயிகளும் அடங்குவா். பதிவு செய்யப்பட்ட ரூ. 3,630.63 கோடி மதிப்பிலான கோரிக்கைகளில் ரூ.3,595.48 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உயா்கல்வியில் ஏஐ, தாராள கலை ஒருங்கிணைப்பு: மக்களவையில் ஜெகத்ரட்சகன் கேள்விக்கு மத்திய அரசு பதில்




