ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்டாசு ஆலை விபத்தில் பலி: மாணிக்கம் தாகூா் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மாணிக்கம் தாகூா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Manickam Tagore

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 4:07 am IST

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் மாணிக்கம் தாகூா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராம்பிரகாஷ், இன்னாசிமுத்து ஆகியோா் உயிரிழந்தனா் என்ற செய்தி அதிா்ச்சி அளிக்கிறது.

அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவா்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.