
முட்டை விலையில் மேலும் 5 காசுகள் அதிகரிப்பு! விலை உயர்வு நாளை முதல் அமல்
முட்டை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ. 6.55-ஆக உயர்ந்தது குறித்து...

முட்டை விலை உயர்வு - பிரதிப் படம்
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சமாக ரூ. 6.55-ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ள நிலையில், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிா்ணயம் செய்கிறது.
இதனிடையே, மேற்காசிய போர் ஏற்பட்டதால் கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு, வெளிநாடு ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் சமீபகாலமாக முட்டையின் விலை உயர்ந்து, கொள்முதல் விலையாக ரூ. 6.50 என்று உயர்ந்தது.
இந்த நிலையில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் இதுவரையில் இல்லாத உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ. 8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு நாளை (ஜூலை 11) முதல் அமலுக்கு வரவுள்ளது.
Summary
Egg price rises to a new high of Rs. 6.55
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




