சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெறுவது பற்றி...

News image

அனிதா ராதாகிருஷ்ணன் கைது... - X

Updated On :3 ஜூலை 2026, 12:44 pm IST

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னாள் அமைச்சர் மற்றும் 7 முறை எம்எல்ஏவாக இருப்பவர், இப்படி பேசலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து சிறிது நேரத்திலேயே அனிதா ராதாகிருஷ்ணன் ஆத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுக்கு சென்றபோது அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய வாகனத்தில் வர அனிதா ராதாகிருஷ்ணன் அனுமதி கேட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்து தங்களுடைய வாகனத்திலேயே கூட்டிச் சென்றனர். அவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

police investigation to Anitha Radhakrishnan at Thoothukudi District SP office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.