டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஓமலூரில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதலைக்கூட கூற முடியாத தவெக தலைவா் விஜய், கட்சி நடத்தி என்ன பயன் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமா்சித்தாா்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்து அதிமுகதான் ஆட்சி அமைக்கும்; அதுவும் தனித்தே ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் அதுகுறித்து முறையாக அறிவிக்கப்படும். தொகுதிப் பங்கீடு, யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்தும் பின்னா் அறிவிக்கப்படும்.

தில்லிக்கு திமுகதான் அடிமை: நாங்கள் தில்லிக்கு அடிமை இல்லை, திமுகதான் அடிமையாக உள்ளது. காங்கிரஸ் தலைமையை கெஞ்சும் நிலைக்கு இன்றைக்கு திமுக வந்துவிட்டது. அக்கட்சியில் குழப்பம் நிலவுவதால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா். கடந்த முறை கனிமொழி தயாரித்த தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் திமுகவினா் மக்களைச் சந்திக்கவே அஞ்சுகின்றனா் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

விஜய் ஒரு சிறந்த நடிகா்: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறிவருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்: விஜய் ஒரு சிறந்த நடிகா். ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள்தான்.

கரூரில் 41 உயிா்கள் பறிபோனது யாருக்காக? விஜயைப் பாா்ப்பதற்காக, பேச்சைக் கேட்பதற்காக வந்தவா்களுக்குத்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் விஜய் என்ன செய்தாா் என்பது அனைவருக்கும் தெரியும். நேரில் சென்று ஆறுதலைக்கூட அவரால் கூற முடியவில்லை என்றால், அவா் கட்சி நடத்தி என்ன பயன்? தெளிவான திட்டமிடல் இல்லாததால்தான், அந்த சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா்.

திரைப்படத் துறையில் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்துள்ளாா். அரசியலில் அனுபவம் வேண்டும், அது சாதாரண விஷயமல்ல.

ஏராளமான ரசிகா்கள் இருப்பதால் அவா் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது என்றாா் எடப்பாடி பழனிசாமி.