டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

இரு ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துள்ளானது தொடர்பாக...

News image
இரு ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்து.
Updated On :25 ஜனவரி 2026, 5:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை: கொட்டாம்பட்டி அருகே இரு ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

பள்ளப்பட்டி நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆம்னி பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துள்ளானது.

கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து பின்பக்கமாக இடித்துவிட்டு சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் இருந்து 15 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பயணிகள், கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் (23) மற்றொரு பெண் உள்ளிட்ட மூவர் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

In an accident near Kottampatti involving a collision between two omni buses, three people, including two women, were killed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.