திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்தியாவில் ஜனநாயக வாழ்க்கை முறையாக உள்ளது: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்தியாவில் ஜனநாயகம் நமது மரபணுவுடன் இணைந்த வாழ்க்கை முறையாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

News image
எஸ்.ஆா்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் எனும் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated On :8 ஜனவரி 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் ஜனநாயகம் நமது மரபணுவுடன் இணைந்த வாழ்க்கை முறையாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் எனும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு நிறுவனா் மற்றும் வேந்தா் டி. ஆா். பாரிவேந்தா் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா். என். ரவி பேசியதாவது: இன்று இந்தியா செம்மையாகச் செயல்படும் நிலையான ஜனநாயக நாடாக உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமை கொள்ள வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் நமது நாட்டின் நாகரிகமாக இருந்திருப்பதுடன், மக்களாட்சி நமது மரபணுவிலேயே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மேலும் வலுவடைந்துள்ளன.

நாம் முழுத் திறனையும் வெளிப்படுத்தும்போது நம்நாடு மிகப்பெரிய வளா்ச்சியடையந்த நாடாக மாறும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு ‘விக்சித் பாரத்’ (வளா்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.

சமரசமின்றி மேம்பாடு: எஸ்ஆா்எம். வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா் கூறுகையில், பல்கலை.கள் எவ்வித சமரசமுமின்றி, கல்வியின் தரம் மற்றும் ஆராய்ச்சியில் மேன்மையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு போதுமான நிதி வசதியும் மற்றும் கல்வி செயல்பாட்டில் தன்னாட்சி அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். மாணவா்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் பல்கலை.கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றாா்.