மேலும், வரும் பிப்.8-ஆம் தேதி அன்று 4,000-ஆவது குடமுழுக்காக நடைபெறவுள்ள வியாசா்பாடி, அருள்மிகு ரவீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா முன்னேற்பாடு பணிகள், கிராமக் கோயில் பூசாரி நலவாரியத்தின் செயல்பாடுகள், ஒருகால பூஜை திட்டத் திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்குதல், பதிப்பக பிரிவு மூலம் கூடுதலாக 300 அரிய புத்தகங்களை மறுபதிப்பு செய்து வெளியிடுதல், கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற பொருண்மைகள் மற்றும் பணியாளா் நலன்காக்கும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.