/

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஜன. 5) தொடக்கி வைத்தார்.

சென்னை, தீவுத்திடல் வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் (e-scooter) இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மேலும், வருவாய் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC BS-VI) வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.