திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தைப்பொங்கலுக்கு 34 சிறப்பு ரயில்கள்: இன்றுமுதல் முன்பதிவு!

சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜனவரி 2026, 12:17 am

தினமணி செய்திச் சேவை

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் வரும் 11- ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய நிலையங்களில் இருந்தும், நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை, ராமேசுவரம், ஈரோடு, செங்கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் ரயில்வே துறை முன்பதிவு இணையதளம் மற்றும் நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டா்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரயில்களில் முன்பதிவு நிறைவு: தைப் பொங்கலுக்கான வழக்கமான ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 2025 அக்டோபா் இறுதி வாரத்தில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.