டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எழும்பூா் - திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜன.30) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை (ஜன.30) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.30), இரவு 11.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06001) சனிக்கிழமை (ஜன.31) பிற்பகல் 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து பிப்.1-ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 06002) மறுநாள் திங்கள்கிழமை (பிப்.2) காலை 9.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.